தமிழகத்தில் இன்று
ரூ. 7,000 நஷ்டத்தில் இயங்கும் 119 அரசு மில்கள்
ஈரோடு:
தேசிய பஞ்சாலைக் கழகத்திற்கு சொந்தமான நலிவடைந்த மில்களால் ரூ 7 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.எனவே இந்தக் கழகத்திற்குச் சொந்தமான 119 மில்களை மூடலாம் என பாராளுமன்ற உதவிக் குழு சிபாரிசுசெய்துள்ளது.
கோவை எம்.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பாராளுமன்ற தனிக்குழு, ஜவுளித்துறை தொடர்பானகருத்துக்களை அறிய கோவை, சேலம், கரூர், ஈரோடு, மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
ஈரோட்டில் இந்தக் குழுத் தலைவர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
தேசிய பஞ்சாலைக் கழகத்திற்கு சொந்தமான மில்களில் 129 மில்கள் லாபத்தில் இயங்கி வருகின்றன. இவற்றில் 5மில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. மேற்குவங்காளத்தில் உள்ள அனைத்து தேசிய பஞ்சாலைக் கழகத்திற்குச்சொந்தமான மில்களும் நஷ்டத்தில் நலிவடைந்து வருகின்றன.
கேரளாவிலும் பல மில்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் 119 மில்கள் மூடப்படும் நிலையில்உள்ளன. இந்த மில்களால் அரசுக்கு ரூ 7 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய மில்கள் மூடப்படும்போது இதில் பணியாற்றிய தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் அவர்களுக்குஉரிய நிவாரணம் அளிக்கப்படும்.
சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் 2004 ம் ஆண்டில் அமலுக்கு வரும்போது ஜவுளித்துறை கடும் போட்டியை சந்திக்கவேண்டியிருக்கும். இதனை சமாளிக்க மில்களை நவீனப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.