தமிழகத்தில் இன்று
சென்னை தீ விபத்தில் 2000 குடிசைகள் நாசம்
சென்னை:
சென்னையில் திங்கள் கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 2000 குடிசைகள்தீக்கிரையானது.
15 தீயணைப்பு வண்டிகளும். 25 மெட்ரோ வாட்டர் நிறுவன நீர் லாரிகளும் ஐந்து மணிநேரம் போராடி தீயை அணைத்தன. இத் தகவலை தீயணைப்புத்துறையின் டைரக்டர்ஜெனரல் ரமணி தெரிவித்தார்.
தீ விபத்து நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம்தெரியவில்லை என்றாலும் , அருகில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டடத்தின்கூரையில் ஏற்பட்ட தீயிலிருந்து, குடிசைகளுக்குப் பரவியிருக்கலாம் எனகூறப்படுகிறது.
தீவிபத்து குறித்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால்அவர்கள் வர தாமதமாகவே, பொதுமக்கள் கோபம் கொண்டு கல்வீச்சில் இறங்கினர்.இதில் சிலர் காயமுற்றனர்.
தீயணைப்புத்துறையினர் அந்த இடம் மிகவும் குறுகலாக இருந்ததால் இடத்தைஅடைவதில் கஷ்டம் இருந்ததாக கூறினர்.
சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் எம்.பாலச்சந்திரன் கூறுகையில் மீட்புப் பணியில்மாநகராட்சிக்கு காவல் துறையினர் உதவி வருவதாக கூறினார்.