தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பலூன் விட்டு காமராஜர் பிறந்தநாள் கொண்டாடிய காங்கிரஸ்

சென்னை:

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது என்று தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் சென்னையில் ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் இளங்கோவன் பலூனை பறக்க விட்ட சிறிது நேரத்தில், பலூன் பஞ்சர் ஆனது. காற்றுவேகமாக வெளியேறியதை அடுத்து, பறக்கவிடப்பட்ட பலூன் உடனடியாக தரையிறக்கப்பட்டது. பிறகு சரிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் காற்றை அடைத்து பலூனை வானில் பறக்கவிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் இளங்கோவன் பேசியதாவது:

நாங்கள் பலூன் பறக்க விடுவது சிலருக்கு வேடிக்கையாக இருக்கும். காங்கிரஸ்காரர்கள் பலூன் பறக்கவிடுகிறார்கள் என்று நினைப்பார்கள்.

தமிழகமெங்கும் காங்கிரஸ்காரர்கள் மத்தியில் ஒரே கருத்து தான் நிலவி வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி,ஆட்சியை கைபற்ற வேண்டும் என்பது தான் அந்த கருத்து.

கோட்டையில் காங்கிரஸ் கொடி பறக்க விடப்பட வேண்டும் என்பதற்கு முன்னோடியாக தான் இங்கே பலூன்பறக்க விடப்படுகிறது. இந்த தேர்தலில் இல்லாவிட்டாலும் அடுத்த முறையாவது காங்கிரஸ் கட்சி, ஆட்சியைக்கைப்பற்றும். காங்கிரஸ் பிரகாசமான வெளிச்சத்தை நோக்கிப் போய் கொண்டிருக்கிறது.

நம்முடைய மடியில் கனம் இல்லை. வழியில் பயம் இல்லை. அதனால் யாருக்கும் நாம் பயப்படத் தேவையில்லை.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றாக வேண்டும். அடுத்த மாதம் 5ம் தேதி சோனியா கோவைவருகிறார். அந்த விழாவில் இளைஞர்கள் திரளாக பங்கேற்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்என்றார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+