தமிழகத்தில் இன்று
விபத்திலிருந்து தப்பிய கோவை விமானம்
கோவை:
கோவை பீளமேடு விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானததின் சக்கரம், சுழலாமல்நின்று விட்டது. இருப்பினும் விமானியின் சாமர்த்தியத்தால் விபத்திலிருந்து தப்பியது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் திங்கள்கிழமை காலை கோவைபீளமேடு விமான நிலையத்திற்குப் புறப்பட்டது. அந்த விமானத்தில் 47 பயணிகள் பயணம் செய்தனர். விமானம்பீளமேடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானத்தின் சக்கரத்தில் ஒன்று திடீரென பழுதடைந்துசுழலாமல் நின்றது.
இதையறிந்த விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக நிறுத்தினார். இதையடுத்து பயணிகள்அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். தகவல் கிடைத்ததும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பநிபுணர்கள் உடனடியாக விரைந்து சென்று விமானத்தின் சக்கரங்களைப் பரிசோதனை செய்தனர்.
பின்னர் விமானம் ஓடுபாதையில் இருந்து நகர்த்தி வரப்பட்டு பத்திரமாக நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்துமதுரையில் இருந்து வந்த இந்தியன் ஏர்லைஸ்சுக்குச் சொந்தமான மாற்று விமானம், 47 பயணிகளையும்ஏற்றிக்கொண்டு மும்பைக்குச் சென்றது.












Click it and Unblock the Notifications