தமிழகத்தில் இன்று
அடுத்த ஆண்டு "நோ பவர் கட் என்கிறார் மின்துறை அமைச்சர்
சென்னை:
அடுத்த ஆண்டு முதல் தமிழகம் மின் தடை இல்லாத மாநிலமாகத் திகழும் என்று தமிழகமின்துறை அமைச்சர் வீராசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வீராசாமி வெளியிட்ட அறிக்கை:
நடப்பு நிதியாண்டில் 800 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யதிட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் மின் தடைஇருக்காது.
தென்னக மின் தொகுப்பில் மின் அழுத்தம் குறைந்ததன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 20முறை மின் துண்டிப்பு ஏற்பட்டது. கோடை காலங்களில் இதுபோன்ற மின் தடைஏற்படுவதை தடுக்க விவசாயத்திற்கான மின் சப்ளை இரண்டு மணி நேரம் குறைக்கப்படும்.
தென்னக மின் தொகுப்பில் உறுப்பினராக உள்ள அனைத்து மாநிலங்களும் ஒத்துழைத்தால்தான் மக்களுக்கு சீரான மின்சாரத்தை அளிக்க முடியும்.
தமிழகத்தில் மின் பகிர்மான இழப்பு 18.9 சதவீதம் தான். செய்யூர் மின் உற்பத்திதிட்டத்திற்கு சுற்றுச் சூழல் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம்நிறைவேற்றுவதற்கான அனைத்து தடைகளும் அகற்றப்பட்டு விட்டன. மத்தியஅரசிடமிருந்து மறு உத்தரவு தான் வரவேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications