தமிழகத்தில் இன்று
சாலமன் தீவு தீவிரவாதிகள் மருத்துவமனையில் சுட்டுக் கொலை
சிட்னி:
சாலமன் தீவுகளைச் சேர்ந்த இஸதாபு சுதந்திர அமைப்பு என்ற தீவிரவாத இயக்கத்தின்இரண்டு வீரர்கள், மருத்துவமனையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த இருவரும் சண்டையின்போது காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். இன்னொரு தீவிரவாத அமைப்பான மலத்தியன் கழுகுப் படையின் மூன்றுதீவிரவாதிகள் முகமூடி அணிந்து வந்து மருத்துவமனையில் வைத்து இவர்களை சுட்டுக்கொன்றனர்.
இவர்களின் கொலைக்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்என்று பிரதமர் மனெஸ்ஸா சொகவரே கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் சாலமன் தீவுகளில் புரட்சி நடந்தது. மலத்தியன் தீவுகளில் இருந்துமக்கள், குடலல்கனால் தீவுகளுக்குள் புகுவதை எதிர்த்து இஸதாபு சுதந்திர இயக்கம்கடந்த 19 மாதங்களாக போராடி வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாதம் இஸதாபுசுதந்திர இயக்கத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர். பிரதமரும் பதவி நீக்கம்செய்யப்பட்டார்.
யு.என்.ஐ.