தமிழகத்தில் இன்று
புலிகள் தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் பலி
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகள் தாக்குதலில் 19 ராணுவத்தினர் பலியானார்கள்.
விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் நடந்து வரும் சண்டை மீண்டும் வேகம்பிடித்துள்ளது. கொழும்புத் துறையில் இருந்து முன்னேறி வரும் ராணுவ வீரர்கள் மீதுவிடுதப்ை புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அரியாலி என்ற இடத்தில் ராணுவ வீரர்களை விடுதலைப் புலிகள் கடுமையாகதாக்கினர். இந்த தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவரும், 18 ராணுவ வீரர்களும்கொல்லப்பட்டனர். 94 பேர் காயமடைந்தனர்.
விடுதலைப் புலிகள் படகு மூழ்கடிப்பு:
இதற்கிடையே, ராணுவ வீரர்கள் கிழக்கு திரிகோணமலை கடற் பகுதியில் நடத்தியதாக்குதலில் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது.அதில் எத்தனை விடுதலைப் புலிகள் இறந்தனர் என்ற விவரம் தெரியவில்லை. இந்தத்தாக்குதலின்போது ராணுவ வீரர்களிடம் பிடிபடாமல் இருப்பதற்காக ஒரு விடுதலைப்புலி தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல, கிழக்கு வல்வெட்டித் துறையில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில்ஒரு விடுதலைப்புலி ஒருவர் கொல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications