தமிழகத்தில் இன்று
தாயின் உடல்நிலை மோசமானதால் மகன் தற்கொலை
திருச்சி:
திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தாயின் உடல் நிலை மோசமானதால்தற்கொலை செய்து கொண்டார்.
நாம் கடவுளை காண முடியாது என்பதற்காகவே நாம் வணங்க நடமாடும் தெய்வமாகதாயை படைத்துள்ளான் இறைவன் என்பார்கள். தனது தாய் மீது பாசம் வைத்திருந்தஒரு இளைஞர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அம்மாவின் உடல்நிலைமோசமானால் வருத்தமடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் தனது தாயின் உடல்நிலை சரியில்லாததால்சிகிச்சைக்காக தில்லை நகரிலுள்ள மருத்துவமனையில் 20 நாட்களுக்கு முன்அனுமதித்தார்.
தாயின் உடல் நிலை குணமாகாமல் மோசமடைந்ததால் அவர் மனம் உடைந்தார்.இதையடுத்து மருத்துவமனையின் மொட்டைமாடியில் விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டார்.
போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.