தமிழகத்தில் இன்று
குமரி வள்ளுவர் சிலைக்கு ஆகஸ்ட் முதல் படகு வசதி
சென்னை:
கன்னியாகுமரி கடலில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயரமுள்ள வள்ளுவர் சிலையை அடுத்த மாதம் முதல்பொதுமக்கள் படகுகளில் சென்று பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் முல்லைவேந்தன் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி புத்தாயிரம்ஆண்டின் முதல் நாளன்று திறந்து வைத்தார்.
சிலை திறப்பு விழா அமைந்த போதிலும் சிலையைச் சுற்றி மண்டபம் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.சுற்றுலாப்பயணிகளை சிலை அமைந்திருக்கும் பாறைக்கு அழைத்து வருவது குறித்து ஆராயப்பட்டு வந்தது. 38அடி உயரத்தில் இதுவரை 31 அடி உயரம் வரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் சிலையைச் சுற்றி மண்டபம் அமைக்கும் பணி நிறைவடைந்து விடும். அடுத்த மாதம்கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டு வரும் காமராஜர் மணி மண்டப திறப்பு விழா நடைபெற உள்ளது.
அன்றைய தினமே திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காகப்படகுகள் விடப்படும் என்று அமைச்சர் முல்லைவேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications