For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மாணவனைக் கொன்ற மாணவன் கைது

செங்கல்பட்டு:

தன்னுடன் படித்த மாணவனைக் கொன்ற இன்னொரு மாணவன் கைது செய்யப்பட்டான்.

செங்கல்பட்டு அடுத்த சாலவாக்கம் அருகில் உள்ள அத்தியூர் காலணியைச் சேர்ந்தவர் வேதாச்சலம். இவரது மகன் பன்னீர்செல்வம் வயது 12 இவன்சித்திமண்டபம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். அதே வகுப்பில் வெங்கடேசன் என்ற மாணவனும் படித்துவருகிறான்.

செவ்வாய்க்கிழமை பன்னீர் செல்வம் பள்ளிக்கூடத்தில் வைத்து தனது பேனாவை உதறினான். அப்பொழுது மை தவறுதலாக, அருகில் இருந்தசகமாணவனான வெங்கடேசன் சட்டையில் தெளித்துவிட்டது. இதைத்தொடர்ந்து இரண்டு சிறுவர்களும் கட்டிப்புரண்டு சண்டைபோட்டனர்.

அப்பொழுது பன்னீர் செல்வம் , வெங்கடேசனை பிடித்து தள்ளினான். இதனால் பள்ளிக்கூட சுவரில் வெங்கடேசன் மோதினான். இதில் அவனுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. உடனே அவனை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவன் வெங்கடேசன்செத்துப்போனான்.

இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கூட ஆசிரியர் சுப்பிரமணியம் சாலவாக்கம் போலீசில் புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து மாணவன் பன்னீர் செல்வத்தை கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X