தமிழகத்தில் இன்று
அக்காவின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்த இலங்கைப் பெண் கைது
சென்னை:
ஆள் மாறாட்டம் செய்து வெளிநாடு செல்ல முயன்ற இலங்கைப் பெண் சென்னைவிமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து பிரேசிலுக்கு சபீனா ஏர்வேஸ் விமானம் செல்கிறது.புதன்கிழமை அன்று இந்த விமானத்தில் ஏறுவதற்காக இளம் பெண் ஒருவர் சென்னைவிமான நிலையம் வந்தார்.
விமான நிலையத்தில் உள்ள எமிக்ரேஷன் அதிகாரிகள் அப்பெண்ணிடம் விசாரணைநடத்தினர். சந்தேகத்தின் பேரில் அவரது பாஸ்போர்ட்டை சோதனையிட்டனர்.
அதில் அவர் ஆள் மாறாட்டம் செய்து பிரேசில் செல்ல முயன்றதுகண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண் சென்னை போரூர் ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தநாகலிங்கம் என்பவருடைய மகள் கீதா (வயது 25) என்றும் தனது அக்கா சுசிலாவின்பாஸ்போர்ட்டில் பிரேசில் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கீதாவை போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீஸ்விசாரணையில் அவர் இலங்கையை சேர்ந்தவர் என்றும் சென்னையில்தங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications