தமிழகத்தில் இன்று
கடும் சண்டையில் 91 புலிகள் 19 ராணுவத்தினர் சாவு
கொழும்பு:
யாழ்பாணத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சண்டையில் 91 விடுதலைப் புலிகளும் 19 ராணுவ வீரர்களும்கொல்லப்பட்டனர். இரு தரப்பிலும் 212 பேர் காயமடைந்தனர்.
திங்கள்கிழமை அரியாலி பகுதியில் புலிகளின் பதுங்கு குழியின் மீது ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதில் 62விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். 118 புலிகள் காயமடைந்தனர். புலிகள் திருப்பித் தாக்கியதில் 19 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். 94 பேர் காயமடைந்தனர்.
சாகவச்சேரியில் புலிகளின் பதுங்கு குழிகள் மீதும் ஒரு வீட்டின் மீதும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 12புலிகள் கொல்லப்பட்டனர். பொன்னேரி பகுதியில் ரோந்து சென்ற ராணுவத்தினர் தாக்கியதில் 5 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
அதே போல வெளியோலா பகுதியில் புலிகள் சென்ற டிராக்டர் மீது ராணுவ ரோந்துப் படை தாக்குதல் நடத்தியது.இதில் 12 புலிகள் கொல்லப்பட்டனர்.