தமிழகத்தில் இன்று
பரூக் அப்துல்லாவை பேச்சுக்கு அழைக்கிறார் வாஜ்பாய்
ஸ்ரீநகர்:
காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சித் தீர்மானம் குறித்துப் விவாதிப்பதற்காக பிரதமர் வாஜ்பாய்காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காஷ்மீர் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள பிரதமர் வாஜ்பாய் ஸ்ரீநகர்சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், காஷ்மீர் சட்டசபையில் 1953 ம் ஆண்டுக்கு முந்தையசூழ்நிலை வேண்டும் என்று கோரி சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை மத்தியஅரசு ஏற்கனவே நிராகரித்து விட்டது. இருந்தபோதிலும் சுயாட்சித் தீர்மானம் குறித்துபேச்சுவார்த்தை தொடரும்.
சுயாட்சித் தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்ததற்குப் பல காரணங்கள் உள்ளன என்றார். இந்தப்பேட்டியின்போது பிரதமருடன் மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications