தமிழகத்தில் இன்று
13-ம் தேதி அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை:
பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 13ம் தேதி அரசு ஊழியர்கள் ஒரு நாள் அடையாளவேலைநிறுத்தம் செய்கின்றனர்.
அரசுத் துறைகளில் ஆள் குறைப்பு நடவடிக்கையை கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களுக்கு நியமனம்செய்ய வேண்டும். நிர்வாக தீர்ப்பாய ஆணைப்படி புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்க வேண்டும்.
சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் மத்திய அரசு ஊதிய விகிதம் அடிப்படையில் வாடகைப் படி வழங்கவேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள்அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அரசு ஊழியர் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
72 சங்கங்கள் சேர்ந்து அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு, 13ம் தேதி வேலை நிறுத்தத்திற்குஅழைப்பு விடுத்துள்ளன. சத்துணவு ஊழியவர்கள், மருத்துவமனை செவிலியர்கள் தவிர மற்ற எல்லாஊழியர்களும் இப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று இக்குழு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களில் 90 சதவீதம் பேர் இப்போராட்டத்தில் ஈடுபடவிருப்பதால், 13ம் தேதி வியாழக்கிழமைஅரசுப் பணிகள் ஸ்தம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications