தமிழகத்தில் இன்று
அமர்நாத் யாத்திரை துவங்கியது
ஜம்மு:
ஜம்முவில் பலத்த ராணுவப் பாதுகாப்புக்கிடையே வியாழக்கிழமை அமர்நாத் யாத்திரை துவங்கியது.
முதல் கட்டமாக 4240 பக்தர்கள் பாஹல்காம் புறப்பட்டுச் சென்றனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள்ஆகியோரும் அடங்குவர். 71 பஸ்கள், 113 டாடா சுமோக்கள், 6 டிரக்குகள், மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவாகனங்களில் சென்றனர். வியாழக்கிழமை மாலைக்குள் அவர்கள் பாஹல்காம் சென்றடைவார்கள்.
வாகனங்கள் செல்லும் வழியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் தவிர்க்கும் பொருட்டு பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. யாத்ரீகர்களுக்கு மருத்துவசிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு ஒன்றும் உடன்சென்றுள்ளது.
ஜம்மு, உதம்பூர், செனானி, பாட்டோட், ராம்சு ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.பானிஹாலில் யாத்ரீகர்கள் வசதிக்காக தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.