தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

அகதியைக் கற்பழித்துக் கொலை செய்த 3 மீனவர்கள் கைது

ராமநாதபுரம்:

இலங்கையிலிருந்து அகதியாகத் தப்பித்து வந்த பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்த மூன்று மீனவர்களைப்போலீசார் கைது செய்தனர்.

இலங்கையில் கடும் போர் நடந்து கொண்டிருப்பதால் அங்கு வாழும் மக்கள் அகதிகளாக படகு மூலம்தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.

இலங்கை மீனவர்கள் அவர்களை நடுக்கடலில் உள்ள மணல் திட்டுப் பகுதியில் இறக்கி விடுகின்றனர். அவர்களைதமிழக மீனவர்கள் படகு மூலம் கொண்டு வந்து ராமேஸ்வரத்தில் விடுகின்றனர்.

இதேபோல கடந்த வாரம் வியாழக்கிழமை 16 அகதிகளை தமிழக மீனவர்கள் நடுக்கடலில் உள்ளமணல்திட்டிலிருந்து மீட்டு ராமேஸ்வரத்தில் இறக்கி விட்டனர். இவர்களில் பத்மராஜ் என்பவரின் மனைவி குமுதினிஎன்ற பெண்ணை மட்டும் அவர்கள் கடத்திக் கொண்டு சென்றனர். இதுகுறித்து மீண்டு வந்த அகதிகள் போலீசில்புகார் கொடுத்தனர்.

விசாரணையில் அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வந்தது. இதையடுத்துகுற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்போலீஸ் படை அமைக்கப்பட்டது.

தனிப்போலீஸ் படையினர் விசாரணை நடத்தி படகு உரிமையாளர் கண்ணனைக் கைது செய்தனர். பின்னர்அவரிடம் விசாரித்ததில் இச்சம்பவத்தில் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்துவேல்முருகன், ரங்கசாமி, விஜயகுமார் என்ற அந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு மீண்டும் 27 அகதிகள் தமிழகம் வந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+