தமிழகத்தில் இன்று
பிஜி பிரதமர் மகேந்திர செளத்ரி விடுதலை
சுவா:
பிஜியில் கடந்த 56 நாட்களாக நாடாளுமன்ற வளாகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த,பதவி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திர பால் செளத்ரிஉள்ளிட்ட 17 பேர் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
மே 19-ம் தேதி புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த பிஜி இனத்தைச் சேர்ந்ததொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் செளத்ரி உள்ளிட்ட பலரை நாடாளுமன்ற வளாகத்தில்சிறை வைத்தார். அதன் பிறகு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. ராணுவம்ஆட்சியைப் பிடித்தது. பிறகு இரு தரப்பினரும் பேசினர். இந்த நிலையில் உடல் நிலைசரியில்லாத ஒரு பினைக் கைதி விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, பினைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ராணுவஆட்சியாளர்களுக்கும், பினைக் கைதிகளுக்கும் இடையே ஒப்பந்தம்கையெழுத்தானது. இதையடுத்து முதலில் 9 பினைக் கைதிகள் புதன்கிழமைவிடுவிக்கப்பட்டனர். மகேந்திர செளத்ரியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை செளத்ரியும், இன்னும் 17 பேரும்விடுவிக்கப்பட்டனர். அனைத்துப் பினைக் கைதிகளும் நாடாளுமன்றத்தை விட்டவெளியேறி விட்டதாக பிஜிரேடியோ தெரிவித்துள்ளது. அனைவரும் மகிழ்ச்சியுடன்காணப்பட்டதாகவும், கண்களில் கண்ணீர் மல்க வெளியே வந்ததாகவும் அதுதெரிவித்தது.
வெளியே விடப்பட்ட மகேந்திர செளத்ரிக்கு, மருத்துவமனையொன்றில் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
யு.என்.ஐ.