For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

காவிரி நீர் ஆணையக் கூட்டம்: டெல்லி சென்றார் முதல்வர்

சென்னை:

காவிரி நீர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக வெள்ளிக்கிழமை டெல்லியில் கூடும் காவிரி நதி நீர் ஆணையக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை டெல்லி சென்றார்.

பிரதமர் வாஜ்பாய் தலைமையில் ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகமுதல்வர் கருணாநிதி, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்,சட்டஅமைச்சர் ஆலடி அருணா, தலைமைச் செயலாளர் முத்துசாமி ஆகியோருடன் சென்னையிலிருந்து 6 மணிக்குவிமானம் மூலம் டெல்லி சென்றார்.

நதிநீர் ஆணையக் கூட்டத்தில், தமிழகத்திற்கு கர்நாடகம் 205 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்றுஆணையக் கூட்டத்தில் வலியுறுத்துவது என கோட்டையில் முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சர்கள்,அதிகாரிகள் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

கடந்தமாதம் நடக்கவிருந்த காவிரிநதிநீர் ஆணையக் கூட்டம் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவின் புறக்கணிப்பால்ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வேன் என்றுகர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். எனவே திட்டமிட்டபடி காவிரிநதிநீர் ஆணையக் கூட்டம்நடக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X