For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

காய்கறி வியாபாரியைக் கொலை செய்தவருக்கு 7 ஆண்டு சிறை

கோவை:

திருப்பூரில் காய்கறி வியாபாரியைக் கொலை செய்த வழக்கில், பைனான்ஸ்அதிபருக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூரில் கருவம்பாளையம், ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் பைனான்ஸ்நிறுவனம் நடத்தி வந்தார். இவர் பிச்சாம்பாளையம் புதூரைச் சேர்ந்த சுப்பையன்என்பவருக்கு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்ய 5 ஆயிரம் ரூபாயை தனதுமனைவி மூலம் கடனாக கொடுத்துள்ளார்.

இந்தப் பணத்தை சுப்பையன் திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் இருவருக்கும்தகராறு ஏற்பட்டது. இதில், கோபமடைந்த மணி, சுப்பையனைக் கத்தியால் குத்தினார்.படுகாயமடைந்த சுப்பையன் இறந்து போனார்.

இது தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணியைக்கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கைவிசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், காய்கறி வியாபாரியைக் கொலை செய்த பைனான்ஸ்அதிபர் மணிக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X