For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ராஜஸ்தான் வறட்சிக்கு ஆஸ்திரேலியா 2 மில்லியன் டாலர் உதவி
டெல்லி:
இந்தியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் குஜராத்திற்கு இரண்டு மில்லியன் டாலர்கள் நிவாரண உதவித்தொகைவழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இதில் ஒரு மில்லியன் டாலர், உலக உணவுத் திட்டத்தின் கீழும், ஒரு மில்லியன் யூனிசெப் மூலமும் வழங்கப்படும் என்று டெல்லியிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் வாழும் மக்கள் சுத்தமான நீரைப் பயன்படுத்தும் வகையில் குடிநீர்க் குழாய்கள் அமைப்பதற்கும், சுகாதாரத்தைமேம்படுத்துவதற்காகவும் இந்த நிவாரண உதவி செய்ய ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரைகள் வழங்கவும் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலியா கூறியுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, July 13, 2000, 5:30 [IST]