தமிழகத்தில் இன்று
மக்கள் கையில் எனது எதிர்காலம் என்கிறார் செளத்ரி
சுவா:
தனது அரசியல் எதிர்காலம் பிஜி மக்களின் கையில்தான் உள்ளது என்று 56 நாட்கள் பிணைக் கைதியாக வைக்கப்பட்டு, வியாழக்கிழமை விடுதலைசெய்யப்பட்ட பிரதமர் மகேந்திர பால் செளத்ரி தெரிவித்தார்.
புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடின் தலைமையில் பிஜி பாராளுமன்ற வளாகத்தில் பிணைக்கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரதமர் மகேந்திரசெளத்திரியும், அவரது அமைச்சரவையிலுள்ளவர்களும் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட பின் தலைநகர் சுவாவில் நிருபர்களிடம் பேசிய அவர், நான் திரும்பவும் பிஜியின் பிரதமர் பதவிக்கு வரவேண்டுமா? வேண்டாமா? என்பதுகுறித்து பிஜி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். என் அரசியல் எதிர்காலம் அவர்களின் கையில்தான் இருக்கிறது.
நான் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறேன். பிஜி ஒரு அருமையான நாடு. இந்த நாட்டுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நம்பினால், அனைவரும்ஒன்றாக சேர்ந்து உழைக்க வேண்டும்.
ஜார்ஜ் ஸ்பீட் மேல் எனக்கு எந்தவிதக் கோபமும் கிடையாது. அவர் எனக்கு எதிரியுமல்ல. அவர் மேல் எனக்கு எந்த விரோதமும் இல்லைஎன்றார்.
செளத்ரியும், அவரது அமைச்சரவை சகாக்களும் கடந்த மே 19 ம் தேதி புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் பிணைக்கைதிகளாகபாராளுமன்ற வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
பின்னர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அவர்களுக்கும், புரட்சிக்காரர்களுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்துபுதன்கிழமை 9 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். வியாழக்கிழமை பிரதமர் மகேந்திர பால் செளத்திரியும், இதர அமைச்சர்களும்விடுவிக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications