தமிழகத்தில் இன்று
ஏற்றுமதியைக் கணக்கிட்டு வரி விதிக்க கோருகிறார்கள் பனியன் உற்பத்தியாளர்கள்
கோவை:
வருமான வரிக்குப் பதிலாக ஏற்றுமதி வர்த்தகத்தை கணக்கிட்டு வரி வசூலிக்கவேண்டும் என திருப்பூர் பனியன் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல்தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச மார்க்கெட்டில் இடம்பிடிக்க வேண்டுமானால், பனியன் கம்பெனிகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்குஅளிக்க வேண்டும்.
அவ்வாறு வரி விலக்கு அளிக்கப்படும்போது, ஏற்றுமதி வர்த்தகத்தின் அடிப்படையில்அரசு வரி வசூல் செய்து கொள்ளலாம். இது ஏற்றுமதியாளர்களைப் பாதிக்காமல்இருக்கும்.
மேலும், பனியன் கம்பெனிகள் ஏற்றுமதிக்காக வங்கிகளில் பெறும் கடனுக்காகவருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது.
இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் சிரமம், வர்த்தக நேரத்தை வீணாக்காமல்இருக்கவும் முடியும். இது தவிர, சுங்க வரி அதிகாரிகளும் ஏற்றுமதியாளர்களின்பொருட்களை மதிப்பிடுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க வேண்டும் என்றுசக்திவேல் தெரிவித்துள்ளார்.