தமிழகத்தில் இன்று
சோனியா அழைப்பு: டெல்லி விரைந்தார் இளங்கோவன்
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அவசர அழைப்பை ஏற்று புதுவை காங்கிரஸ் முதல்வர் சண்முகம், தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி வருகை தர சோனியா திட்டமிட்டுள்ளார். வருகிற 15ம் தேதிகாமராஜர் பிறந்த நாள். அதை கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 5ம் தேதி பாண்டிச்சேரியில் பேரணியும்,கோவையில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் சோனியா பங்கேற்க வேண்டும் என்று புதுவை முதல்வர் சண்முகம், தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதை சோனியா ஏற்றுக் கொண்டுள்ளதாகதெரிகிறது. அதுபற்றி விவாதிப்பதற்காக இவர்கள் இருவரையும் உடனே டெல்லி வரும்படி சோனியாஅழைத்துள்ளார். அதன்பேரில் இருவரும் வியாழக்கிழமை டெல்லி சென்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அவர்களிடம் சோனியா விவாதிக்கஉள்ளார்.












Click it and Unblock the Notifications