தமிழகத்தில் இன்று
பிகார் சட்டசபைக்குள் துப்பாக்கிகளுடன் திரியும் எம்.எல்.ஏ.க்கள்
பாட்னா:
பிகார் சட்டசபைக் கூட்டத்தொடருக்கு சட்டைக்குள் துப்பாக்கியை மறைத்துக்கொண்டு வரும் எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இனிமேல் இவர்கள் துப்பாக்கியுடன் வருவதற்குத் தடைவிதிக்கப்படும் என்று முதல்வர் ராப்ரிதேவி தெரிவித்தார்.
பிகாரில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்து இருப்பதால் சட்டசபைக் கூட்டத்தொடருக்கு வருவதற்குஎம்.எல்.ஏக்கள் அஞ்சுகிறார்கள். அதனால் அவர்கள் பாதுகாப்புக் கருதி துப்பாக்கியை தங்களது சட்டைப்பையில்மறைத்து வைத்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களது அந்தரங்கப் பாதுகாவலர்களும் சட்டசபை வளாகங்களில்அதிகம் நடமாடுகிறார்கள்.
இதுகுறித்து பிகார் முன்னாள் முதல்வர் லல்லுப் பிரசாத் யாதவ் கூறுகையில், இந்த நிலை மாற வேண்டும்.சட்டசபைக்குள் ஆயுதங்களுடன் வரக்கூடாது என்று அவர்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். ராஷ்டிர ஜனதாக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இதற்கு ஓத்துழைப்பு கொடுப்பார்கள். பிற கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் ராஷ்டிரியஜனதாக் கட்சி சார்பில் ஆயுதங்களுடன் சட்டசபைக்குள் வரக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.
சட்டசபை வளாகத்தில் எம்.எல்.ஏ.க்களின் அந்தரங்கப் பாதுகாவலர்கள் உலவுகின்றனர். இதுகுறித்து இரண்டுநாட்களுக்கு முன் நான் சபாநாயகர் சதானந்த் சிங்கிடம், அவர்களை சட்டசபை வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாதுஎன்று பாதுகாவலர்களுக்கு உத்தரவிடுமாறு கூறினேன் என்றார்.
இதையடுத்து அவர், சட்டசபை நடவடிக்கை குழு வுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில்பிகார் சட்டசபைக்குள் ஆயுதங்களுடன் வரும் எம்.எல்.ஏ.க்களுக்கு தடை விதிக்கப்படும். மேலும் அவர்களதுஅந்தரங்க பாதுகாவலர்கள் சட்டசபை போர்டிகோவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படும்.
மொத்தம் உள்ள 324 எம்.எல்.ஏக்களில் 40 சதவீதத்தினர் மேல் வழக்குகள் உள்ளன. 12 பேர் கடத்தல், கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்றார்.
இதையடுத்து முதல்வர் ராப்ரிதேவி தலைநகர் பாட்னாவில் எம்.எல்.ஏ.க்கள் துப்பாக்கியுடன் சட்டசபைக்குள்வருவதற்கு விரைவில் தடைவிதிக்கப்படும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications