தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிர மழைக்கு 40 பேர் பலி

மும்பை:

கடும் மழையின் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 40 பேர் பலியாகியுள்ளனர்.

இரண்டு நாளாக பெய்து வரும் பலத்த மழையினால் பஸ், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரைமழை,வெள்ளத்திற்கு 40 பேர் இறந்துள்ளனர்.

வடகிழக்கு மும்பையிலுள்ள காட்கோபூர் பகுதியில் ஆசாத் நகர் குடிசைப் பகுதி உள்ளது. கடும் மழையினால்அங்கிருந்த சிறிய மண் குன்று ஒன்று சரிந்து விழுந்தது. இந்நிலச்சரிவில் அப்பகுதியில் வசித்து வந்த 40 க்கும்மேற்பட்ட மக்கள் இறந்தனர். அவர்களில் 6 பேர் பெண்கள், 10 பேர் சிறுமிகள்.

இந்த நிலச்சரிவில் 42 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மற்றவர்கள் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.

மும்பை, குர்லா, மட்டுங்கா, சியோன், கார், டாசிசார் பகுதிகளில் சாலையோரங்களில் அதிக அளவு மழை நீர்தேங்கிக் கிடக்கிறது. இதனால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

ரயில் பாதைகளில் 3.8 மீட்டர் அளவுக்கு தண்ணீர் தேங்கியிருப்பதால் டெக்கான் குயின் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ்ரயில்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு மாநில அரசு விடுமுறைஅறிவித்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு மழையும், இடியுடன் கூடிய கடும் மழையும்பெய்யலாம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்லவேண்டாம் என்று துணைப் போலீஸ் கமிசனர் (போக்குவரத்து) கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+