தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மழை வந்திருந்தால் மயில்கள் பிழைத்திருக்குமா?
போபால்:
மத்திய பிரதேசத்தில் மொரினா மாவட்டத்தில் இந்த ஆண்டு சரியான அளவில் மழைபெய்திருந்தால் 70-க்கும் மேற்பட்ட மயில்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்என்று கூறப்படுகிறது.
மொரினா மாவட்டத்தில், சமீபத்தில் வயல்களில் உள்ள பூச்சி மருந்து கலந்த செடிகளைசாப்பிட்ட 70-க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்தன. வழக்கமாக இந்தப் பகுதியில்இந்தக் காலகட்டத்தில் நல்ல மழை பெய்வது வழக்கம்.
மழை பெய்வதால், பயிர்களில் உள்ள பூச்சி மருந்துகள் தண்ணீரில் கலந்து போய்விடும். பூச்சி மருந்து காரணமாகவே மயில்கள் இறந்தது போஸ்ட் மார்ட்டத்தில் தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த ஆண்டு மழை பொய்த்தது. இதனால் பூச்சி மருந்தும் போகவில்லை.இதனால் மயில்கள் இறந்ததாக கிராமத்து மக்கள் கூறுகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications