தமிழகத்தில் இன்று
என் வீட்டுக்கருகே கட்டடமா? ஸ்டே வாங்கிய சேஷன்
சென்னை:
சென்னையில், தனது வீட்டருகே 11 மாடிக் கட்டிடம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையுத்தரவு வாங்கியுள்ளார் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்டி.என்.சேஷன்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளராக இருந்தபோது தான் விதிகளை மீறிய கட்சிகளையும், அதன்தலைவர்களையும் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார் சேஷன். ஓய்வு பெற்ற பிறகும் அவர் சும்மாஇருக்கவில்லை.
அவருடைய வீட்டுக்கு அருகே விதிகளை மீறி 11 மாடிக் கட்டடம் கட்டப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்து தடையுத்தரவு வாங்கியுள்ளார் சேஷன்.
சென்னை மயிலாப்பூர் செயின்ட் மேரிஸ் சாலையில் சேஷன் வீடு உள்ளது. இந்த வீட்டருகே உள்ள காலி நிலத்தில்,11 மாடி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சேஷன் தாக்கல் செய்த மனுவில், நான் குடியிருக்கும் பகுதி பிரதான குடியிருப்பு பகுதி. எனவே 11மாடிகள் கொண்ட வணிகக் கட்டிடங்களை அங்கே கட்ட அனுமதிக்கக் கூடாது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு கடிதம் எழுதினேன். பதில் இல்லை. இதற்கிடையில்அந்த பகுதியை வணிகப் பகுதியாக அறிவித்துள்ளனர். இது தவறு என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பத்மநாபன், 11 மாடிக் கட்டிடம் கட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.