தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மாணவர்கள் மோதலில் பஸ்கள் உடைப்பு, கடைகள் அடைப்பு

சென்னை:

சென்னையில் மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் நான்கு பஸ்கள்உடைக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்களுக்கும், நந்தனம்கலைக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் பஸ்கள்,கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துதடைப்பட்டது.

உடனடியாக போலீசார் விரைந்து வன்முறையை கட்டுப்படுத்தி மாணவர்களைகலைத்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், நந்தனம் கல்லூரிமாணவர்கள் சிலர்வியாழக் கிழமை காலை புதுக்கல்லூரிக்குள் புகுந்து சில மாணவர்களை தாக்கி விட்டுச்சென்று விட்டனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கல்லூரி மாணவர்கள் வன்முறையில்ஈடுபட்டுள்ளனர் என்றனர்.

இந்த திடீர் வன்முறைக்கு இன்னொரு காரணம் கூறப்படுகிறது. புதுக்கல்லூரியைசேர்ந்த ஒரு சில மாணவர்கள் பெண்களை "ஈவ் டீசிங் செய்ததாகவும், அதனால்ஆத்திரமடைந்த அப்பகுதியில் உள்ள சிலர் அம்மாணவர்களை தாக்கியதாகவும்கூறப்படுகிறது.

அதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போதுதான் பஸ்கள்உடைக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+