தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஊரகச் சாலைகளை மேம்படுத்த ரூ. 2500 கோடி நிதியுதவி
திருச்சி:
நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ. 2500 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய மின் துறை அமைச்சர்ரங்கராஜன் குமாரமங்கலம் கூறியுள்ளார்.
திருச்சியில் நெடுஞ்சாலைத் துறை மண் பரிசோதனை ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து அவர் பேசுகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 315ஊரக சாலை மேம்பாட்டுப் பணிகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் திருச்சியில் மட்டும் 216 பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மீதமுள்ள 99 பணிகளையும் இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்க மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொண்டுள்ளேன். இந்தப் பணிக்கு எம்.பி. நலநிதியிலிருந்து ரூ. 1 கோடி ஒதுக்க ஏற்பாடு செய்வேன் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications