For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

விடுதலைப் புலிகள் கண்ணிவெடிக்கு 3 ராணுவத்தினர் பலி

கொழும்பு:

விடுதலைப் புலிகள் வைத்த கண்ணிவெடியில் இலங்கை ராணுவ வாகனம் தகர்ந்தது. இதில் அதிலிருந்த 3ராணுவத்தினர் பலியானார்கள்.

தனிஈழம் கோரிப் போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான சண்டைமீண்டும் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் இருக்கும்சலம்பைகுளம் பகுதியில் விடுதலைப்புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி ராணுவ வீரர்கள் வந்து கொண்டிருந்தவாகனம் சுக்குநூறாய் சிதிறியது.

இதில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயமடைந்தனர். இன்னொரு சம்பவத்தில்விடுதலைப்புலிகள் துப்பாக்கியால் சுட்டதில் இலங்கைப் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

இதற்கிடையே, வெளி ஓயா பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளில் ராணுவ வீரர்கள் தாக்கியதில் 3விடுதலைப் புலிகள் பலியாகியுள்ளனர். சாவகச்சேரி, பொன்னார் பகுதிகளில் 2 விடுதலைப் புலிகளை ராணுவவீரர்கள் வெட்டிக்கொன்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X