தமிழகத்தில் இன்று
இந்தியாவில் தயாரிக்கப்படும் கம்ப்யூட்டர்களுக்கு மவுசு இல்லை
மும்பை:
இந்தியாவில் கம்ப்யூட்டர் விற்பனை கடந்த ஆண்டு 37 சதவீதம் அதிகரித்துள்ளது.இருப்பினும் இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் கம்ப்யூட்டர்களின் விற்பனை அளவுமிக மோசமாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு 10.4 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது 1998-99ம்ஆண்டை விட இரண்டு லட்சம் கூடுதலாகும். இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் ஹார்ட்வேர், பயிற்சி மற்றும் சேவைக் கழகம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை 2000-2001ல் ஆண்டு 10.9 லட்சம் என்ற இலக்கைத் தாண்டும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இது 35 சதவீத கூடுதல் வளர்ச்சி ஆகும்.
பிரான்ட்கள் அற்ற, உதிரி பாகங்களால் உள்ளூர்களில் வடிவமைக்கப்படும்கம்ப்யூட்டர்கள் (அசெம்பிள்ட்) விற்பனைதான் அதிக அளவில் உள்ளது. இது1999-2000ம் ஆண்டில் 58 சதவீதமாக இருந்தது. முந்தைய ஆண்டு இது 53 சதவீதமாகஇருந்தது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகவே அசெம்பிள்ட் கம்ப்யூட்டர்கள்,விற்பனையில் சக்கை போடு போடுகின்றன.
1997-98ல் கம்ப்யூட்டர் விற்பனை 3.7 லட்சமாக இருந்தது. 99-00ல் இது 8லட்சத்திற்கும் மேற்பட்டதாக இருந்தது. இந்தியச் சந்தையில் விற்பனையாகும்பன்னாட்டு நிறுவன கம்ப்யூட்டர்கள் விற்பனை சதவீதம் 22 சதவீதத்திலிருந்து 23சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்திய பிரான்டு கம்ப்யூட்டர்கள் விற்பனை 25சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக குறைந்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications