தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோழி "பீஸ் ஏற்படுத்திய கோபத்தில் மனைவியை மாடியிலிருந்து எறிந்த கணவர்
கெய்ரோ:
எகிப்தில், மகன்களுக்கு வைத்ததை விட சிறிய கோழித் துண்டை வைத்ததால் கோபமடைந்தவர் தனது மனைவியை மூன்றாவது மாடி ஜன்னல் வழியேதூக்கி வீசினார்.
அல் அக்பர் என்ற அந்தப் பத்திரிக்கையில் இச்செய்தி வெளியாகியுள்ளது. கோபக்காரரின் மனைவி கோழிக்கறி சமைத்துள்ளார். சமைத்த கறியில், பெரியதுண்டுகளை தனது இரண்டு மகன்களுக்கும் கொடுத்து விட்டு, சிறிய துண்டை கணவருக்குக் கொடுத்துள்ளார்.
இது அவரைக் கோபப்படுத்தியது. இதனால் ஆத்திரத்தில் மனைவியை மூன்றாவது மாடிக்கட்டிடத்தில் உள்ள ஜன்னல் வழியே தூக்கி வீசியதாக செய்தியில்கூறப்பட்டிருந்தது.
படுகாயமடைந்த அந்த அப்பாவிப் பெண் ணை பக்கத்து வீடுகளில் வசித்து வருபவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். கோபக்கார கணவன் கைதுசெய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications