தமிழகத்தில் இன்று
இவுங்கல்லாம் விவசாயிகள் தாம்ப்பா...
சென்னை:
அரசியல் போரடித்துப் போய் விட்டதோ என்னவோ தெரியவில்லை. விவசாயிகளுக்காக போராடப் போவதாக அறிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின்முன்னாள் தலைவர் தங்கபாலு.
சென்னையில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் கூட்டம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியில் உள்ள தனது கோஷ்டி ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனைநடத்தினார். இந்திய விவசாயச் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை தாம் நடத்தி வருவதாகவும், அதன் தலைவர் என்ற முறையில் விவசாயிகள் பிரச்னைகுறித்து விவாதிப்பதற்காகவும் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தங்கபாலு தெரிவித்தார்.
ஆனால், அந்த கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லாரும் காங்கிரசில் உள்ள அவரது ஆதரவுப் பிரமுகர்கள் மட்டுமே. ஆலோசனைக்கு பின்னர்செய்தியாளர்களை சந்தித்த தங்கபாலு, விவசாயிகள் வாங்கிய கடனுக்கான ஜப்தி நடவடிக்கையை தமிழக அரசு கை விட வேண்டும்.
ஜப்தி நடவடிக்கையை கை விட்டு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். விவசாயத்திற்கானமானியத்தை படிப்படியாக ரத்து செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துத்ததை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24ம்தேதி மாவட்டத் தலைநகரங்களில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
விவசாயிகள் பெயரில் ரகசிய அரசியல் ஆலோசனையா, வந்திருந்தவர்களில் யாரும் விவசாயிகள் இல்லையே என்றெல்லாம் அரசியல் பற்றி நிருபர்கள்கேட்ட கேள்விகளுக்கெல்லாம் வாய் திறக்க மறுத்து விட்டார் தங்கபாலு.
அரசியல் தொடர்பாக எந்த கேள்விக்கும் பதில் அளிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications