தமிழகத்தில் இன்று
பிஜியில் ஜனநாயகம் மலர உலக நாடுகள் உதவக் கோருகிறார் செளத்ரி
டெல்லி:
பிஜியில் ஜனநாயகத்தைக் கொண்டு வர உலக நாடுகளிடம் உதவி கோரப் போவதாக56 நாட்கள், பினைக் கைதியாக இருந்து வியாழக்கிழமை விடுதலையான, முன்னாள்பிரதமர் மகேந்திர பால் செளத்ரி கூறியுள்ளார்.
விடுதலையான செளத்ரி பி.பி.சிக்கு அளித்த பேட்டியில், எனது அரசு பதவி நீக்கம்செய்யப்பட்டது தவறானது. புரட்சிக்காரர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் சமூகவிரோதிகள். இவர்கள் எனது ஆட்சியை நீக்கியது சட்டவிரோதமானது.
எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய, எனது கட்சி நிர்வாகிகளின்கூட்டத்தை வெள்ளிக்கிழமை கூட்டியுள்ளேன். அப்போது எதிர்கால நடவடிக்கைகுறித்து முடிவு செய்யப்படும்.
பிஜியில் இப்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள புதிய அரசு, நாட்டின்எதிர்காலத்தையே பாழடித்து விடும். ஜனநாயகம் இங்கே கேள்விக்குரியாகியுள்ளது.
ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான கும்பலின் பிடியில் இரண்டு மாதம் இருந்தது மிகவும்கொடுமையான நாட்கள் என்றார் அவர்.
யு.என்.ஐ.
பிஜி:மக்கள் கையில் எனது
எதிர்காலம் என்கிறார் செளத்ரி