தமிழகத்தில் இன்று
கருப்பு தினம்: கொழும்பில் 5 மனிதவெடிகுண்டுகள் கைது
கொழும்பு:
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் போலீஸார் நடத்திய சோதனையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஐந்து மனித வெடிகுண்டுகள் பிடிபட்டனர்.
விடுதலைப் புலிகள், ஜூலை 23-ம் தேதி கருப்பு தினம் அனுசரிக்கிறார்கள். 1983-ல்நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கலவரத்தில், 1500-க்கும் மேற்பட்டதமிழர்கள் உயிரிழந்தனர். இதை நினைவு கூரும் விதத்தில், விடுதலைப் புலிகள்,கருப்பு தினம் கடைப்பிடிக்கின்றனர்.
கருப்பு தினத்தின்போது, விடுதலைப் புலிகள் வன்முறையில் ஈடுபடலாம் என்பதால்கொழும்பு நகரில் போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். இந்தச் சோதனையில், 2மனித வெடிகுண்டுகள் உள்பட 5 பேர் பிடிபட்டனர். அவர்கள் யார் என்ற விவரம்தெரிவிக்கப்படவில்லை.
பிடிபட்ட ஐந்து பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. மனித வெடிகுண்டுகள்பிடிபட்டுள்ளதையடுத்து கொழும்பு முழுவதிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications