தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தியாகி நெல்லை ஜெபமணி மரணம்
சென்னை:
சுதந்திரப் போராட்ட தியாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நெல்லை ஜெபமணிமரணமடைந்தார். அவருக்கு வயது 82.
காமராஜ் தேசியக் கட்சித் தலைவராக இருந்த நெல்லை ஆர்.ஜெபமணி, 1977 - 80 வரைசாத்தான்குளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1981ல் தமிழக ஜனதா தலைவராக பதவிவகித்தார்.
இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி. இவரது மனைவி திருநாவுக்கரசி என்றபூச்செண்டு ஏற்கனவே இறந்து விட்டார்.
ஜெபமணிக்கு மோகன்ராஜ், தினகரன், லட்சுமி, பிரேமா, பவானி என்ற மகன், மகள்கள்உள்ளனர்.
அவரது உடலடக்கம் வெள்ளிக் கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது. பல்வேறு அரசியல்பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications