தமிழகத்தில் இன்று
குடும்பத்தகராறில் விஷம் குடித்த "குடிமகன்
வேலூர்:
குடும்பத் தகராறு காரணமாக தந்தை விஷம் குடித்தார். அதைக் கண்ட மகளும் விஷம்குடித்தார்.
வேலூருக்கு அருகே உள்ளது ரத்தினகிரி என்னும் சிற்றூர். இங்குள்ள கீழ் மின்னல்பகுதியில் வசித்து வருபவர் முனுசாமி. இவருக்கு மலர் என்ற மகள் உண்டு. முனுசாமிமகா குடிகாரர். குடி குடியைைக் கெடுக்கும் என்பதை மதிக்காமல் சம்பாதிக்கும்அனைனத்தையும் குடிக்கே செலவழித்து வந்த குடிமகன் அவர்.
முனுசாமியின் குடிகாரத்தனத்தால் வீட்டில் இவருக்கும், மனைவிக்கும் அடிக்கடிசண்டைகள் நடந்து வந்தது. தினந்தோறும் நடந்து வந்த நிலையில்வியாழக்கிழமையன்று முனுசாமி மனம் வெறுத்து விஷம் குடித்தார். தந்தை விஷம்குடிப்பதைப் பார்த்த அவரது மகள் மலரும் விஷம் குடித்தார்.
விஷம் குடித்த தந்தையும், மகளும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வேலூர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் இன்னும் ஆபத்தானநிலையிலேயே உள்ளனர்.