தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தனுஷ்கோடி வந்த 17 இலங்கை அகதிகள்
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து 17 அகதிகள் வியாழக்கிழமை படகு மூலம் தமிழகம் வந்தனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும்போர் நடந்து வருவதால் போர்நடக்கும் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு அகதிகளாகத் தப்பி வந்த வண்ணம் உள்ளனர்.
வியாழக்கிழமை அதிகாலை 17 பேர் படகு மூலம் தப்பி தனுஷ்கோடி அருகேயுள்ள முகுந்தராயர்சத்திரம் பகுதியைவந்தடைந்தனர்.
கடந்த 6 ம் தேதி தப்பி வந்த அகதிகளின் உடமைகள் நடுக்கடலில் விழுந்து விட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்துபோலீசார், மீனவர்களின் உதவியுடன் கடலுக்குள் சென்று தேடினர். ஆனால் அகதிகளின் உடமைகள் எதுவும்கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications