தமிழகத்தில் இன்று
எம்.எல்.ஏக்களிடம் வாடகை வசூலிக்க அரசு திட்டம்
சென்னை:
சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வீடு ஒதுக்கப்பட்டுவிட்டது. எம்.எல்.ஏக்களிடமிருந்து ரூ 250 வாடகை வசூலிக்கலாமா என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என்று தமிழக சட்டசபை சபாநாயகர்பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பழனிவேல்ராஜன் பேசுகையில், வீடு ஒதுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமிருந்தும் வீட்டு வாடகையாகமாதந்தோறும் ரூ 250 வசூலிக்கலாமா என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து ஆலோசனை கூற அமைக்கப்பட்டஎம்.எல்.ஏ.க்கள் குழுவிடமிருந்து பரிந்துரை எதுவும் வரவில்லை.
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் அவரது தொகுதியில் அலுவலகம் கட்டித் தர அரசு தீர்மானித்திருந்தது. அதன்படி பெரும்பாலான தொகுதிகளில்எம்.எல்.ஏ.க்களுக்கு அலுவலகங்கள் கட்டப்பட்டு விட்டன. எனது தொகுதி அலுவலகக் கட்டிடத்தை முதல்வரைக் கொண்டு அடுத்த மாதம்திறக்கலாம் என்றிருக்கிறேன்.
செப்டம்பர் மாதம் 14 முதல் 20 ம் தேதி வரை லண்டனில் காமன்வெல்த் பார்லிமென்ட் மாநாடு நடக்கிறது. அதில் கலந்துகொள்வது குறித்து நான்இன்னும் முடிவெடுக்கவில்லை.
சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதிக்குள் கூட்டப்படும் என்றார் பழனிவேல்ராஜன்.












Click it and Unblock the Notifications