தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழக முதல்வர்கருணாநிதி முதல்வராக இருப்பதால் தமிழ்த் திரையுலகுக்கு இனி நல்லகாலம் என்று தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் சரத் குமார் கூறியுள்ளார்.
நடிகர் சரத்குமார் வெள்ளிக் கிழமை தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். நடிகர்கள்விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், நெப்போலியன், முரளி, விவேக் உள்ளிட்ட நடிகர்கள்,குஷ்பு, ரேவதி, வினிதா உள்ளிட்ட நடிகைகள், சென்னை மேயர் ஸ்டாலின்,மு.க.அழகிரி உள்ளிட்ட தி.மு.க பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காலை 8 மணிக்கு பிறந்த நாள் கேக்வெட்டினார் சரத் குமார். மனைவி, மகள்களுக்கு அதை ஊட்டினார். பின்னர் அவருக்குநடிகர் விஜயகாந்த், முரளி, நெப்போலியன், விவேக், மயில்சாமி, இயக்குனர்கள்சேரன், ராஜகுமாரன், சூர்யகுமார், பவித்ரன் ஆகியாாேர் பொன்னாடை அணிவித்துபிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் கருணாநிதியின் மகன்களான மேயர் ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர்தொலைபேசியில் சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல் நடிகர்கள் பிரபு, சத்யராஜ், அர்ஜூன், பார்த்திபன், சிவகுமார்,கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், நடிகைகள் ரேவதி, குஷ்பு, ராதிகா மற்றும் பலர்தொலைபேசியில் வாழ்த்தினர்.
பிறந்த நாளை முன்னிட்டு செய்தியாளர்களுக்கு சரத்குமார் அளித்த பேட்டியில்,திரையுலகத்திற்கு இப்போது நல்ல காலம் பிறந்துள்ளது. தமிழக முதல்வராகதிரையுலகை சேர்ந்த கருணாநிதி இருப்பதாலும், நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த்பொறுப்பேற்றுள்ளதாலும் திரையுலகத்தினருக்கு ஒளிமயமான எதிர்காலம்பிறந்துள்ளது.
எந்த பிரச்னையாக இருந்தாலும் நமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.அதற்கான முயற்சிகளில் நடிகர் சங்கம் ஈடுபடும்.
கடந்த வருடம் "ஒருவன் படம் நன்றாக இருந்தாலும், சரியாக ஓடவில்லை. இப்போது"மாயி படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படம் நன்றாக வரும் என்றுநம்புகிறேன்.
ஹே ராம் மாதிரி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு சரியாக போகவில்லைஎன்றால் பிரச்னையாகி விடும் என்பதால், படத்தின் ரீலிசை ஏப்ரலில் இருந்துஆகஸ்ட்டுக்கு தள்ளி வைத்துள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications