தமிழகத்தில் இன்று
குப்பத்து மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி தருகிறது த.மா.கா.
சென்னை:
குப்பத்து மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர் கற்றுத் தரப் போகிறது த.மா.கா.
சென்னையில் 6 குப்பங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர்பயிற்சி அளிக்கும் திட்டத்தை 16ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முன்னாள் நிதியமைச்சர்ப.சிதம்பரம் தொடங்கி வைக்கிறார்.
வேறு எந்த கட்சியிலும் இல்லாத வகையில் த.மா.கா.வில், அறிவியல்தொழில்நுட்பத்திற்கென தனி ப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவின்தலைவராக அமெரிக்கா நாராயணன், மூப்பனாரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாப்ட்வேர் தொழில்நுட்பம் பற்றி நன்கு அறிந்துள்ள நாராயணன், இப்போது இந்தபுரட்சித் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இத்திட்டம் பற்றி அவர் அளித்த பேட்டி:
கம்ப்யூட்டர் கல்வியும், பயிற்சியும் வசதி படைத்தவர்களுக்கு தான் என்ற நிலைஉள்ளது. இதை மாற்றி குப்பத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் கம்ப்யூட்டர்பயிற்சி அளிக்கப்பட வண்டும் என்று த.மா.கா விரும்புகிறது. அதை செயல்படுத்தும்திட்டம் தான் இது.
இத்திட்டப்படி சென்னை நகரில் 6 குப்பங்களை தேர்ந்தெடுத்துள்ளோம். ஒவ்வொருகுப்பத்திற்கும் 40 மாணவ மாணவிகளை தேர்வு செய்து இலவச கம்ப்யூட்டர் பயிற்சிஅளிக்கிறோம்.
நான்காம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மட்டுமே இந்தபயற்சி. மொத்தம் 13 வாரம் பயிற்சி தரப்படும். வாரத்திற்கு ஒரு நாள் குப்பத்தில் தங்கிகம்ப்யூட்டர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
இத்திட்டம் முதலில் விசாலாட்சி குப்பம் என்ற இடத்தில் தொடங்குகிறது. 16ம் தேதிஅங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், இதை தொடங்கிவைத்துப் பேசுகிறார். த.மா.கா.வின் மற்ற மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்என்றார்.