தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மீண்டும் தலைதூக்கிய ஈவ் டீசிங்: மாணவி தற்கொலை

சேலம்:

சேலம் அருகே "ஈவ் டீசிங் மிரட்டலால் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள திம்மம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி அகிலா (17). இவர் தினம்பள்ளிக்குச் சென்று வரும் வழியில் 3 பேர் அடிக்கடி தொல்லை செய்யத் தொடங்கினர். அகிலா பயணம் செய்யும் தனியார் பஸ்சில் இவர்களும் ஏறி, அடிக்கடிபயறுத்தி வந்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக இந்தப் பெண்ணை பின் தொடர்ந்து உனது "ஆடைகளை அவிழ்த்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். உலியாபுரம் என்ற இடத்தில்நடந்த கோயில் கும்பாபிஷேகம் ஒன்றிற்கு வெள்ளிக்கிழமையுடன் தினம் அகிலா சென்றுள்ளார்.

அங்கும் இந்த 3 பேரும் பின் தொடர்ந்து, துன்புறுத்தி வந்துள்ளனர். அடுத்த நாள் பள்ளிக்கு வரும்போது, அகிலாவின் உடைகளை அவிழ்த்து விடுவதாகமிரட்டியுள்ளனர்.

இதனால் பீதியடைந்த அகிலா, தன் பெற்றோர்களிடம் இது பற்றிக் கூறி, பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என மறுத்துள்ளார். ஆனால், அவரதுபெற்றோர்கள் அகிலாவிடம், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது பயப்படாமல் பள்ளிக்குப் போ, எனக் கூறியுள்ளனர்.

இதனால், மிகவும் மன உளைச்சல் அடைந்த அகிலா, வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் செல்லாமல், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக அகிலாவின் பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக திம்மம்பட்டியில் ஆட் டாடிரைவாக உள்ள யூசுப் (20), நூர் முகமது (19), ஜாஃபர் ஆகியோரைக் கைது செய்தனர்.

இது தொடர்பாக சேலம் மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் தொடரும் இந்தக் கொடுமை குறித்து உங்கள் கருத்து என்ன?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+