For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
வியட்நாமில் பஸ் தீப்பிடித்து எரிந்து 30 பேர் சாவு
ஹனோய்:
வியட்நாமில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் அதில் சென்ற 30 பயணிகள் உடல் கருகி இறந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை வியட்நாமின் மத்தியப் பகுதியான ந்யூ தானாஹ் மாவட்டத்தில் இவ்விபத்து ஏற்பட்டது. பஸ்சில் ஏற்றிச் சென்ற ரசாயனப்பொருட்கள் வெடித்ததால் பஸ் தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என்று போலீசார் கூறினர்.
இவ்விபத்தில் இறந்தோர் மற்றும் காயமடைந்த அனைவரும் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த ஆறுமாதத்தில் மட்டும் இங்கு நடந்த சாலை விபத்துக்களில் 3920 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 13, 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Monday, July 17, 2000, 5:30 [IST]