தமிழகத்தில் இன்று
உடுமலையில் நாராயண கவிக்கு மணி மண்டபம்
கோவை:
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், உடுமலையில் உள்ள நாராயண கவியின் மணி மண்டபம் ஆகியவற்றைத் திறக்கமுதல்வர்கருணாநிதி ஆகஸ்ட் 2-ம் தேதி கோவை செல்கிறார்.
இத் தகவலை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வனத்துறை நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பொள்ளாச்சியில் ஒரு மடை விட்டு ஒரு மடைப் பாசனத்தை அமல்படுத்த மோகனகிருஷ்ணன் கமிட்டி பரிந்துறை செய்தது. இப் பரிந்துரையை ஏற்று புதிய பாசனமுறை தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது. இதற்கான துவக்கவிழா ஆகஸ்டு 2-ம் தேதி நடக்கிறது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
கோவையில் நீண்ட நாட்களாகத் திறப்பு விழாவுக்குக் காத்திருக்கும் போலீஸ் கமிஷனர் அலுவலகம், நீதிமன்ற வளாகம் ஆகியவற்றையும் உடுமலையில்உள்ள நாராயண கவி மணி மண்டபத்தையும் முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க உள்ளார் என்றார் துரைமுருகன்.