தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பசுவதை தொடர்ந்தால் உண்ணாவிரதம்...எச்சரிக்கிறார் காஞ்சி சுவாமிகள்

காஞ்சிபுரம்:

பசுக்கள் சித்ரவதை செய்யப்படுவதைக் கண்டித்து காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாடு முழுவதும் பசுக்கள் சித்ரவதை செய்யப்படுவதைக் கண்டித்து ஒரு வாரம் நாடுதழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. வரும் 23 ம் தேதி இந்தப்போராட்டத்தை நான் தொடங்கி வைக்கிறேன். அதே நாள் காஞ்சிபுரத்தில் பசுவதை தடுப்புச் சட்டம் குறித்த தேசிய கருத்தரங்கு நடக்கிறது. அந்தகருத்தரங்கில் மத்தியஅமைச்சர் மேனகா காந்தி கலந்து கொள்கிறார்.

ஒவ்வொரு குடும்பமும் பசுக்களைப் பாதுகாக்க வேண்டும். பசுக்களை விற்பதற்கோ வதை செய்வதற்கோ லாரிகளில் ஏற்றிச் செல்வதை லாரிஅதிபர்களும், டிரைவர்களும் தவிர்க்க வேண்டும்.

பசுக்கள் சித்ரவதை செய்யப்படுவது குறித்து அனைத்து மத உறுப்பினர்கள் அடங்கிய கிராம கமிட்டி கூட்டங்கள் நடத்தப்படும். பசுவதை செய்யப்படுவதைதடுத்த நிறுத்தக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்குப் பரிந்துரை செய்யப்படும்.

ஜனகல்யாண், சர்வோதயா மற்றும் அரசு சாரா இயக்கங்கள் சார்பில் பிரச்சார குழுக்கள் அமைக்கப்படும். அவர்கள் கிராமம், கிராமமாகச்சென்று பசுக்கள் வதை செய்யப்படுவதற்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவார்கள்.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதைக் கண்டித்து நான் காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+