For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
நண்பரைக் கொன்ற இருவருக்கு ஆயுள் சிறை
கோவை:
நண்பரைக் கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம் திருப்பூரில் உள்ள அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மற்றும் குணா. இவர்களுக்கும் இவரது நண்பர் பன்னீர்செல்வத்திற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் பன்னீர்செல்வத்தை இருவரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், குணா மற்றும் முத்துக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்புக்கூறினார்.
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Tuesday, July 18, 2000, 5:30 [IST]