தமிழகத்தில் இன்று
பாட்னா விமான விபத்தில் பலியான சென்னை அதிகாரி
சென்னை:
பாட்னா விமான விபத்தில் பலியான சென்னை அதிகாரி குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.
சென்னை டி.டி.கே. நிறுவனத்தில் நிதி மேலாளராக பணியாற்றி வந்தவர் ராமச்சந்திரன் (45).பல்லாவரத்தில் அலுவலகம் உள்ளது. தனது கம்பெனி வேலையாக அடிக்கடி வெளிமாநிலங்களுக்குசென்று வருவது வழக்கம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விமானம் மூலம் கல்கத்தா சென்றார். திங்கள் கிழமைடெல்லி செல்வதற்காக விமானத்தில் பறந்தபோது தான் விபத்தில் பலியானார்.
அவரது உடல் சின்னாபின்னமாகி விட்டதால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றுபாட்னாவில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர். அடையாளம் கண்டுபிடிப்பதற்காக மனைவி மற்றும்உறவினர்கள் பாட்னா விரைந்துள்ளனர்..
பலியான ராமச்சந்திரன் சொந்த ஊர் மாயவரம் அருகில் உள்ள செம்பனார் கோவில். சென்னைதேனாம்பேட்டை கணபதி காலனியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது மனைவிஉமா. மகன் பிச்சுமணி (வயது 6).