தமிழகத்தில் இன்று
காஞ்சி காமாட்சிக்கு ரூ.2 லட்சத்தில் வைரத்தாலி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு ரூ. 2 லட்சத்தில் வைரத் தாலி அணிவிக்கப்படும் என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 66-வது ஜெயந்தி விழா வரும் ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
14-ம் தேதி நடைபெறும் விழாவில் புதுவை துணைநிலை ஆளுநர் ரஜினி ராய் கலந்துகொள்கிறார். 15-ம் தேதி காலை காமாட்சி அம்மனுக்கு புதிதாகசெய்யப்பட்டுள்ள ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வைரத் தாலி அணிவிக்கப்படும்.
ஜெயந்தி விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்படும். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,பூஜைகள் செய்யப்படும்.
ஸ்ரீசங்கர மடத்தில் நடைபெறும் சந்திரமெளலீஸ்வரர் பூஜைக்கு தங்க ரதம் உருவாக்கப்படுகிறது. அண்மையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதிருவானைக்காவல் கோயிலில் நித்ய கால பூஜைகள் நடத்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது என்றார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.