தமிழகத்தில் இன்று
ஜெயலலிதாவின் கார்கள்: நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை
சென்னை:
ஜெயலலிதாவுக்கு சொந்தமான 21 கார்களை முடக்கி வைக்க தனிநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் புதன்கிழமை இடைக்கால தடை விதித்தது.
அந்த வாகனங்களை விற்க மாட்டேன் என்று தனிநீதிமன்றத்தில் ஜெயலலிதா உறுதி அளிக்க வேண்டும் என்றுஉயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான ரூ 66.5 கோடி ஊழல் வழக்கில்ஜெயலலிதாவுக்கு சொந்தமான 21 வகை கார்களையும், தங்க, வைர, வெள்ளி நகைகளையும் முடக்கி வைக்கமுதலாவது தனி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.இம்மனு நீதிபதி அக்பர் பாஷா காதிரி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வக்கீல்கள்வாதத்திற்கு பின்பு தனிநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார் நீதிபதி அக்பர் பாஷா.
நீதிபதி கூறிய தீர்ப்பில், 21 வாகனங்களையும் விற்க மாட்டோம் என்று ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்குபேரும் பிரமாண வாக்குமூலம் ஒன்றை தனிநீதிமன்றத்தில் அளிக்க வேண்டும். அந்த வாகனங்களுக்கானஆர்.சி.புத்தகங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். ரூ 50 லட்சத்திற்கான ஒரு நபர் ஜாமீன் பத்திரத்தைஆகஸ்ட் முதல் வாரத்திற்கு முன்பாக வழங்க வேண்டும் என்றார். வழக்கை வரும் ஆகஸ்ட் 1ம் தேதிக்குத்தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications