தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ரத்த தானப் போராட்டம் நடத்த முயன்ற மின்வாரிய ஊழியர்கள் கைது

சென்னை:

கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த தானப் போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத்தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில்புதன்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்யாமல்அப்புறப்படுத்தினர்.

இரண்டாவது நாளாக வியாழக்கிழமை அவர்கள் நூதனப் போராட்டம் என்ற பெயரில் ரத்த தானம் செய்யப்போவதாகக் கூறி மின்வாரிய அலுவலகம் முன்பு கூடினர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர்.

இதுபற்றி சென்னை நகர போலீஸ் கமிஷனர் பெ. காளிமுத்து கூறியதாவது:

நூதனப் போராட்டம் என்ற பெயரில் மொட்டை அடிப்பது, பாதி மீசையை எடுப்பது, பிச்சை எடுப்பது என்றபோராட்டங்கள் நடத்துவது சட்டத்துக்குப் புறம்பானது. இப்படிப்பட்ட போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது.

முதல் நாள் பிச்சை எடுக்கும் போராட்டத்தை மின்வாரிய ஊழியர்கள் நடத்தினர். அடுத்த நாள் வரமாட்டார்கள்என்ற நம்பிக்கையில் அவர்களைக் கைது செய்யாமல் அனுப்பி வைத்தோம்.

ஆனால், மறுநாளும் விநோதப் போராட்டம் என்று வீதிக்கு வந்தவர்களை கைது செய்து காவலில் வைத்துவிட்டோம். 15 நாட்கள் அவர்கள் சிறையில் இருப்பார்கள் என்றார் காளிமுத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+